Tuesday, December 16, 2008

மும்பை தீவிரவாதமும் செய்தி சானல்களும்


தற்போது உள்ளே வெடிகுண்டு சத்தம் கேட்டது...

இப்போதுதான் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் பெரிய அளவில் கேட்டது..


இப்படியாக தொடர்து செய்திகளை பிளாஷ் நியூசாக வெளியிட்டு தங்களே முதன்மையான செய்திகளை தருவதாக பறைசாற்றி கொண்டு..அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டும் ராணுவ வீரர்களை புகழ்ந்துகொண்டும் நிமிடங்களை கடத்தி கொண்டு இருந்தனர்.


ஒரு செய்தியை எந்த ஆர்வத்தில் cover செய்து வெளியிட முயற்சி செய்கின்றனரோ.. அதே அளவு அந்த செய்தி தந்த பின்விளைவுகள் அல்லது அந்த செய்தி வர காரணாமான முன்விளைவுகளையோ மறந்துவிடுவதொடு வாசகர்களையும் பார்வையாளர்களையும் மறக்க செய்துவிடுகின்றனர்..


தங்களுக்கு விளம்பரமில்லாத விளம்பரம் தாராத எந்த செயல்களையும் செய்திகளையும் இந்த சானல்கள் ஊக்குவிப்பதே இல்லை.. இந்த சானல்களில் நடுநிலை என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். இந்த சானல்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் ஆதரவோடும் அல்லது ஆளுங்கட்சியின் எதிர்பாக இருக்கும் எதிர்கட்சியின் ஆதரவோடும் தங்கள் வருமானத்தை பெருக்கிகொள்வதை மட்டுமே குறிக்கோளாய் செயல்படுவாதகவே ஒரு சராசரி குடிமகனான எனக்கு படுகிறது..



தீண்டாமை இன்னும் எத்தனை கிராமங்களில் முழுமையாக தொடர்கிறது என்று எந்த சானலாது செய்தி சேகரித்து உண்மை நிலவரங்களை சொல்லுகிறதா ?


படிப்பு வாசனையே எட்டாத சிறார்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உலகுக்கு சொல்லியிருக்கிறதா.. ?


விவசாயத்தையே நம்பியுள்ள விவசாயத்தையே மூலதனமாக கொண்ட இந்திய நாட்டில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறதே அது ஏன் என ஆய்வு மேற்கொண்டதுண்டா ?


பண முதலைகளுக்கு மட்டுமே செயல்படும் அரசுகளை சாட்டையை சுழற்றி விமர்சித்ததுண்டா?


எந்த வன்முறையையும் விழுந்து அடித்து கொண்டு கவர் செய்யும் இந்த மீடியாக்கள் அந்த வன்முறையின் வித்து எது என்றோ அல்லது அந்த கலவரத்தின் முடிவில் என்ன உண்மையில் நடந்தது என்ற ஆய்வு மேற்கொள்ளவோ தயாராக இருப்பதில்லை.


சுனாமி வந்தபோது அதற்கான எச்சரிக்கை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்தது ஆனால் நம் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்று ஒரு வாதம் வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதினை இந்த மீடியாக்கள் வெளியே கொண்டு வர முயற்சி எடுத்ததா.. அது உண்மை எனில் அதற்க்கு காரணமான நம்முடைய அரசாங்கத்தை தட்டி கேட்க எந்த செய்தி நிறுவனமாவது முன்வந்ததா ?

கும்பகோணத்தில் எரிந்து போன பிள்ளைகளை படம் எடுத்து வேக வேகமாக வெளியிட தெரிந்த இந்த செய்தி நிறுவனங்களுக்கு அதே போன்று இன்னும் எத்தனை பள்ளிகள் இங்கே இன்னும் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பை எடுக்க தெரிந்ததா?


குஜராத்தில் அரசாங்கத்தால் திட்டமிட்டு நடைபெற்ற ஒரு இன கருவறுப்பை எந்த மீடியாவினாலும் பகிரங்கமாக குற்றம்சாற்றி அந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புல்லையேனும் புடுங்க முடிந்ததா.. ?


மொத்தத்தில் இந்த மீடியாக்களுக்கு responsibility என்று எதுவும் இல்லை.
எறும்பை எருதுவாகவும் எருமையை எறும்பாகவும் காட்டி பணக்கார வர்க்கங்களுக்கு வாலை ஆட்டிக்கொண்டு வருமானம் சேர்க்கும் இந்த செய்தி நிறுவனங்களுக்கு வாழ்வுதான் எப்போதுமே..


இவர்களுக்கு சானியா மிர்சாவும் சச்சின் டேண்டுல்கருமே சாதனையாளர்கள்.