Wednesday, May 28, 2008

தன்னம்பிக்கை

நான் பயங்கர சோம்பேறி. நினைவில் தோன்றும் நூறு நல்ல சிந்தனைகளில் ஒன்று அல்லது இரண்டை மட்டுமே எழுத விழைவேன். என் அன்னை அடிக்கடி சொல்லுவது போல " கையாலாகாத காடமுட்டை " நான்.

போதும் சுயதம்பட்டம். எதையோ எழுதவேண்டும் என்று வந்தேனே.. ம்.. ம் மறந்துவிட்டது. யெஸ். ஞாபகம் வந்து விட்டது..பொதுவா பேனாவ எடுத்தா யாரையாவது விமர்சிக்கணும். இல்லையென்றால் கதை, கவிதை எழுதணும். எனக்கு மேலே சொன்ன எதுவும் எழுத வராது.. வேற எதை எழுதலாம் ? ..O.K. அன்றாடம் பார்க்கும் நல்ல விஷயங்களை பாராட்டி எழுதலாம் என்று தோன்றுகிறது. சரி. இன்றைய பாராட்டு.

" தீர்க்கமுடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. மக்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த திட்டமும் தடைகளை கடந்து வெற்றி பெறுவது நிச்சயம்."

சொன்னது - கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவி திருமதி விஜயா கதிவேல்.

தன்னம்பிக்கையான வார்த்தைகளுக்கு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

No comments: