Monday, June 11, 2012

எல்லாமும்.... அன்பை தவிர...

எதையோ படித்துக்கொண்டிருக்கும்போது இந்த வரிகள் கண்ணில் பட்டது..

The Older you get
..
The better you understand...
That everything else is just shouting into the Wind...
Everything except LOVE...

எண்ணம் எனும் குரங்கு சடசடவென பதின்ம வயதுக்கு ஓடியது.


ஒரு வெள்ளிகிழமை. தொழுகைக்கு பள்ளியில் அமர்திருக்கையில் முன் வரிசையில் லேசான சலசலப்பு. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரிக்கின்றது. எழுந்து என்னவென பார்க்க முன்வரிசைக்கு போகிறேன். எல்லோரும் எழுதுநின்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். பலாப்பழத்தை இரண்டாக பிளந்ததை போல கூட்டம் இரண்டாக பிரிந்து, ஒரு பக்கம் முழுக்க முழுக்க இளைஞர்களும் சிறியவர்களும், மறுபக்கம் என் தந்தை, சித்தப்பா, தாத்தா, அங்காளி-பங்காளிகளுமாக, ஒரே சத்தம். சில வினாடிகளிலேயே என்ன எதுவென எனக்கு விளங்கிவிட்டது.


சிறியவர்கள் ஆர்வமாக சீக்கிரமாக தொழவந்து முன்வரிசை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள். பின்னால் வந்த வயதானவர்களுக்கு(முன் வரிசையிலேயே எப்போதுமே அமர்பவர்கள்) இடமில்லாமல் லேசாக எழுந்த சலசலப்பு பெரிதாகிவிட்டிருந்தது. எதையும் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் எதிர்கொள்ளும் இளமை எனக்கு. நானும் இளைஞர் பக்கம் நின்று சத்தமிடுகிறேன்.

 

" முன் வரிசை வேணுமுன்னா சீக்கிரம் வரணும். ஆடி அசைஞ்சி வந்தா பின்னாடிதான் உக்காரணும்" - நான்.
" மொதல்ல மூத்திரம் பேஞ்சிட்டு கால ஒழுங்கா கழுவிட்டு, எப்படி தொழனுமுன்னு தெரிஞ்சிட்டு முன்னாடி வந்து ஒக்கார சொல்லுடா" - தத்தா
" காலக்கழுவலன்னு இவருதான் எட்டி பார்த்தாரு.." - மற்றொரு இளைஞன்.
" பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை தெரியுதாடா ஒங்களுக்கு, நீங்களெல்லாம் என்னத்த படிக்கிறீங்களோ" - மற்றொரு பெருசு
இப்படியான நீண்ட சலசலப்புக்கிடையில் "தொழுகை நேரமாகிவிட்டது" என இமாம் தொழ தொடங்க அவரவர் கிடைத்த இடங்களில் தொழ தொடங்கினர்.

எனக்கோ கோபம் குறைந்தபாடில்லை. வீட்டுக்கு வந்து காச்மூச்சுன்னு அம்மாவிடம் கத்தினேன். சண்டையின் இடையிடையே " வாயமூடிட்டு சும்மா இரு" ன்னு அப்பா என்னை கண்டித்தது, என் கோபத்திற்கு மேலும் நெருப்பு மூட்டியது. "கொஞ்சமாச்சும் நேர்மையா இருக்க தெரியுதா. வயசானாலே புத்தி வேலை செய்து போல" ன்னு அம்மாவிடம் எகுறுகிறேன்.


அப்பா வந்து என்ன சத்தமுன்னு கேட்டுட்டு " டேய், ஏற்கனவே அவருக்கு (தத்தாவோட தம்பி) ரெண்டுவாட்டி அட்டாக் வந்திடுச்சு..நீ பாட்டுக்கு கத்திட்டிருந்தினா அவரும் டென்சனா ஆகி ஏதாவது ஆயிடுச்சுனா ஒனக்கு சந்தோசமா இருக்குமா. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் இப்படி மல்லுகட்டிட்டு இருந்தா எதுவுமே சரியா வராது. ஒனக்கு இப்ப இதெல்லாம் புரியாது. உன் வயசு அப்படி" ன்னு சொன்னார்.


மறுபடியும் அந்த வரிகள்


The Older you get..

The better you understand...
That everything else is just shouting into the Wind...
Everything except LOVE...

No comments: